-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.


உள்ளடக்கத் துளிகள்.


"தந்தை_பெரியார்" கூறுகிறார்;
"நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில்
இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.
அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன
இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை."
[28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)]
  • இவ்வாதம் அறிவியல்வாதமா?
  • அல்லது அடிப்படைவாதமா?
  • தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும்
    தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து
    அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
  • தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள்
    எவ்வாறிருப்பர்?




பரந்து விரிந்த பிரபஞ்சம் முதற் கொண்டு நுண்ணிய அணுவின் கட்டமைப்பு வரையும் ஆய்வு செய்யும் விஞ்ஞானத்தால் ஏன் இறைவனை இதுவரை காண முடியவில்லை?

இறை மறுப்பு கொள்கையாளர்களின் தர்கத்தின் தொனிதான் இது. இதற்கான விடை காண முதலில் நாம் விஞ்ஞான ஆய்வின் தன்மையை அறிய வேண்டும். உலக உயிரினங்களில் மனிதன் உயர்ந்த நிலையை அடைய அவனது ஆறாவது பகுத்தறியும் திறனே தனியொரு காரணம் என்பதை அறிவோம். ஏனைய ஐந்து புலனறிவுகளிலும் மனிதனை விஞ்சிய உயிரினங்கள் ஏராளம் உள்ளன. கழுகுக்கு-பார்வை சக்தியையும், வௌவ்வாலுக்கு-கேட்கும் திறனையும், நாய்க்கு-நுகரும் திறனையும், பூனைக்கு-உணரும் திறனையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். இந்த புலனறிவுகளுக்கு அப்பால் மனிதனுக்கு சிறப்பாக கிடைக்கப்பெற்றுள்ள பகுத்தறியும் திறனை விஞ்ஞானம் எந்தளவு தூரம் தனது ஆய்வில் பிரயோகிக்கிறது என்பதையே இங்கு நாம் ஆராய வேண்டும். இவ்வாய்வின் மூலம் குறுகிய வட்டத்தினுள் இருந்து வீரம் பேசும் விஞ்ஞானத்தின் அறியாமையை தெளிவாகவே அடையாளப்படுத்டுத்துவதுடன், விஞ்ஞானம் அறிவியலின் ஒரு பகுதியே தவிர விஞ்ஞானமே அறிவியலின் முழு வடிவமல்ல என்பதையும் சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.




அடுத்த ஆய்வுக்க்காக,
விஞ்ஞானமும் பகுத்தறிவும்.





உங்களது கருத்துகள்.