-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

"விஞ்ஞானமானது வரையறுக்கப்பட்ட கொள்திறன் கொண்ட புலனறிவுகளான ஐந்தறிவுகளுக்குள் அடைபட்டவாறு அவ்வறிவுகளால் உணரக்கூடியவைகளை மாத்திரமே தனது பகுத்தறியும் திறனை பிரயோகித்து ஆய்வு செய்கிறது. மாறாக பகுத்தறியும் திறனை சுதந்திரமாக தனித்து செயல்பட அனுமதி கொடுப்பப்பதில்லை"
[புலனறிவுகள்=பார்வை(கண்), மணம்(மூக்கு), சுவை(நாக்கு),ஓசை(காது), உணர்ச்சி(தோல்)]

என்ற விளக்கத்தையே விஞ்ஞானமாக இங்கு நான் மேற்கோளிட விளைகிறேன். இதற்கு உறுதி சேர்க்கும் சம்பவங்களையும் விஞ்ஞான உலகிலிருந்தே உதாரணங்களாக எடுத்து அடுக்கலாம். மனிதனது புலனறிவுகளால் உணரமுடியாத உண்மைகளை யதார்த்தங்களை கோட்பாடுகளாக முன்வைத்த சில அறிவியல் மேதைகளை "தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்ற ஒரே காரணத்துக்காக எள்ளி நகையாடிய வரலாறுகளை விஞ்ஞான உலகில் பரவலாக காணலாம்.



இங்கு நான் தெளிவாக கூற வந்த விடயம் அறிவியலால் முடியாது என்பதல்ல. புலனறிவியலின் சிகரமான விஞ்ஞானத்தால் முடியாது என்பதையே. ஒற்றை வரியில் கூறுவதாயின்,

"அறிவியலின் ஒரு பகுதியே விஞ்ஞானம் அதுவே அறிவியலின் முழு வடிவமல்ல"

என்பதாகும்.அவ்வாறாயின் அறிவியலின் ஏனைய பகுதிகள் என்ன?
நிச்சயம் கேள்வி எழ வேண்டும். எழுவதே அறிவுக்கழகு. ஆம், விஞ்ஞானத்தால் நிரூபிக்க திறனற்றிருப்பவைகள் குறித்து கேள்வி மேல் கேள்விகள் தொடுத்து அவற்றை பகுத்தறிவின் துணை கொண்டு நிறுவும் முயற்சிகளை தொடர வேண்டும். ஆம் புலனறிவுகள் பகுத்தறிவைத்தூண்ட எமக்கு நாமே வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எமது சிந்தனைக்கு நாமாகவே எல்லைக்கோடிடாமல் சிந்தனையை விரியச்செய்ய வேண்டும். அதன் போதே அறிவியல் பூரணமாகும், செய்யாது நிற்பின் அதுவே அடிப்படைவாதமாய் அடையாளப்படுத்தப்படும்.


-03-அறிவியலும் அடிப்படைவாதமும்.

அடிப்படை வாதத்துக்கான இவ்வரைவிலக்கணம் மூலம் உங்களது சிந்தனைகளைத்தூண்டி கேள்விகளைக் கேளுங்கள்.

அறிவை பெறுவதில் தமக்கென சுயமான எல்லைக்கோட்டை வரைந்து அதற்கு வெளியே சிந்திக்க மறுக்கின்ற கூட்டத்தையே அடிப்படை வாதிகள் (fundamentalist) என்ற பதம் குறிக்கின்றது.

இவ்வரைவிலக்கணத் துணையுடன் உலகின் சகல தத்துவங்களையும் ஒப்பு நோக்குங்கள்.


-விஞ்ஞானம்-
தொலைக் காட்டிகளுக்கும் நுணுக்குக் காட்டிகளுக்கும் அகப்படாது விட்டால்,
அல்லது அகப்படாது என நிச்சயமாக தெரிந்தால்
அதுவே உலகின் மிகப்பெரும் புதிராய் இருந்தாலும் சரியே அது பற்றி சிந்திப்பதே வீண் வேலை எனக்கருதுகிறது விஞ்ஞானம்.
சிந்தனைக்கு வரையறை இடும் இவ்வாதம்

  • அறிவியல்வாதமா?
  • அடிப்படைவாதமா?
-நாஸ்திகம்-
இவ்வாறே நாஸ்திகம் பேசியதில் முதன்மையாளரான "தந்தை_பெரியார்" கூறுகிறார்;

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. 28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)


இவ்வறிஞரின் கூற்றை அடையாளப்படுத்துவதற்காக சிந்திக்க வேண்டுகிறேன்.

  • இவ்வாதம் அறிவியல்வாதமா?
  • அல்லது அடிப்படைவாதமா?
  • தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
  • தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள் எவ்வாறிருப்பர்?
எவர் எவ்வாறிருப்பினும் இன்று நாம் மிக ஆழமான தேடலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது கடமை என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம் முழு உலகிடமும் இன்று மிகைத்து நிற்பது மரணத்திற்கு பின் அமையப்போகும் வாழ்க்கை குறித்த அச்சம் கலந்த பார்வையே ஆகும்.




அடுத்து, அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.



உங்களது கருத்துகள்.