-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும்



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.

-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.

-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?

நாஸ்திகர்களுக்கு நான் வாதத்திற்காக கூற விரும்புவது, நண்பர்களே இறைவன் இல்லையெனின் பாதிப்பேதும் இல்லை. சிந்தனைக்கு என்றுமே இரண்டு பக்கங்கள் உண்டல்லவா? இங்கு நாம் அடுத்த பக்கமாக சிந்திக்க வேண்டியது தவறுதலாகவேனும் இருந்து விட்டால் எமது நிலை என்ன? இந்த கேள்வியை உங்களுக்குள் கேட்பதன் மூலம் இறைவன் இல்லை என்பதையும் கூட தான்தோன்றித்தனமாக அல்லாமல் ஆய்வின் மூலமே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அது எவ்வாறு நாஸ்திகத்தை ஆய்வு செய்வது? என்ற கேள்வி எழலாம். இறை மதங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்தையும் உங்கள் மனசாட்சி "பொய்" என்று தெளிவாக கூறும் வரையும் அவற்றை ஆய்வு செய்யுங்கள். சகல மத அறிஞர்களிடமும் மனதில் தோன்றும் அனைத்து கேள்விகளுக்கும் தயங்காது விளக்கம் கேளுங்கள்.
  • இறைவன் உள்ளானா?
நிச்சயமாக தெளிவு கிடைக்கும்.

-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும் தலைப்பு.

(நபியே) உம்மை(முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக)மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராகவும் (அவனையும் இத்தூதரையும் நிராகரிப்பதன் கடுமையான வேதனைகள் குறித்தும்) அச்சுறுத்தி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.(அல்குர்ஆன்-34.28)

என்ற வாதத்துடன் திருக்குர்ஆனின் துணை கொண்டு பிரச்சாரம் செய்து வெற்றி கண்ட முஹம்மத்(ஸல்) அவர்களையும் அவர்கள் முன்வைத்த கொள்கை கோட்பாடுகளையுமே. இவ்வாறான இன்னும் அதிகளவானோர் வரலாற்றில் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டதாக கூறியவர்கள், கூறிக்கொண்டிருப்பவர்களும் உள்ளனர். அவர்கள் குறித்த தேடல்களையும் விரிவுபடுத்துங்கள். அவைகளையும் இவரது வாதத்துடன் ஒப்பிட்டு நோக்குங்கள். (தகவல்கள் உள்ளோர் முடிந்தால் இவ்வாறான சிந்தனைக்குரிய அறிவியல் முறையில் வலைப்பதிவாக்கி தரும்போது அவைகளுக்கும் இத்தளம் தொடுப்பு கொடுக்கும் என்ற உறுதியை தருகிறேன். இத்தளத்தின் கருத்து பரிமாற்றத்துக்கான பகுதி திறந்தே உள்ளது.)


இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.














உங்களது கருத்துகள்.