இதுவரை படித்தவைகள்.
இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.
-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?
-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.
-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.
-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.
-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?
-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும்.
-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.
- உலகின் அறிவியல் துறைகளான வரலாறு, பொருளியல், விஞ்ஞானம் என நீண்டு செல்லும் உலகின் அனைத்து துறைகளையும் ஆழமாக ஆராய்ந்து அவைகளை தன்னுடன் ஒப்பிட்டு உறுதிபடுத்த சொல்கிறது இறைவழி காட்டியான திருக்குர்ஆன்.
- மேலும் 70 வருடங்கள் வணங்குவதை விடவும் ஒரு மணி நேரம் கல்வியை தேடுவதை உயர்வாக கூறுகிறது நபிகளாரின் வாக்கு.
- ஆராய்சியே மனிதனின் கடமை அது இன்றி இறைவனை நிராகரிக்க முனைவீர்களாயின் நரகவேதனை நிச்சயம் என ஆய்வுகளை வேண்டுகிறது இஸ்லாம்.
இனி இவ் இஸ்லாத்துடன் விஞ்ஞானம், நாஸ்திகம் என்பவைகளையும் மனிதர்களால் எழுதப்பட்ட வெற்றுத்தத்துவங்களையும் சுயமாக நீங்களே ஒப்பிடுங்கள்.
- இதில் எது அறிவியல்வாதம்?
- எது அடிப்படைவாதம்?
- இன்று உலகில் யார் அடிப்படைவாதிகள்?
- உலகம் யாரை அழகாக திட்டமிட்டு அடிப்படைவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கிறது?
இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அவ்வாறல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.-(அல்குர்ஆன்-16:38. )
நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், "எங்கள் கேடே! நாங்கள் திரும்ப(வும் உலகிற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்(நம்பிக்கையுடையவர்)களாக இருப்போம்" எனக் கூறுவதைக் காண்பீர்.(அல்குர்ஆன்-6:27)
இங்கு நான் இஸ்லாத்தை கண் மூடி நம்புமாறு வலியுறுத்தவில்லை. இனியும் அதற்கான முயற்சிகளை செய்யப்போவதுமில்லை. அது எனது ஆற்றலுக்குட்பட்ட விடயமுமல்ல. மாறாக அத்தாட்சிகளை ஆய்வு செய்யுமாறே வலியுறுத்துகிறேன். எனக்கு கிடைத்த தெளிவை உலகிற்கு அறியப்படுத்துவதை மட்டுமே என் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இக்கடமையை செய்ய என்னைத் தூண்டுவது மரணத்திற்கு பின்னுள்ள பயம் மட்டுமே. இக்கடமைக்கும் இஸ்லாம் எல்லை வைத்துள்ளது அதைத்தாண்டும் நோக்கமும் நிச்சயம் எனக்கில்லை.
ஆயினும் (இஸ்லாத்தை உண்மையென கண்டும்) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை (அல்குர்ஆன்-80:7)
-08-இறைவனைத் தேடும் அறிவியலுக்கான திறப்பு எங்கே?
NASA வானியல் ஆய்வாளர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான கலாநிதி மைக்கேல் எச். ஹார்ட் இதுவரை உலகில் செல்வாக்கு செலுத்திய நூறு நபர்களின் பட்டியலில் முதன்மையானவராக முஹம்மத்(ஸல்) அவர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இங்கு ஆராயப்பட வேண்டிய விடயம் இவரது முடிவையல்ல. இவர் இம்முடிவுக்கு வரக் கூறும் காரணத்தையே ஆகும். கேளுங்கள்.
"இதுவரையுமான மனித சரித்திரத்தில் சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் அவர் ஒருவரே. அதாவது இவர் சிறந்த அரச இராஜதந்திரியாகவும், திறனுள்ள பேச்சாளராகவும் சட்ட வல்லுனராகவும், பொருளியலாளராகவும், தத்துவ ஞாநியாகவும் சீர்திருத்த வாதியாகவும் மற்றும் இராணுவத்தளபதியாகவும் கூட ஒரே நேரத்தில் இருந்து வெற்றியடைந்துள்ளார்.
இவரது இக்கூற்று மாற்று கருத்துக்கு இடம் தராத உண்மையே. ஆனால் இவ்வதிசய சாதனை நிகழ்த்திய கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் இதற்கு கூறிய காரணம் என்ன?
"தனது முழு செயலுக்குமான காரணம் இறைவனையே சாரும்; அவனது கட்டளைப்படி தான் நடந்ததைத் தவிர தன்னிடம் எதுவுமில்லை"
என்று வாதிடுகிறார்.
- இவரது வாதத்தின் தன்மையை அணுவணுவாகக் ஆராய்வதை ஏன் அறிவியலாகக் கொள்ளக் கூடாது?
- இக்கேள்வியை அடிப்படை வாதமாக்க முனையும் சூழ்ச்சிக்கு காரணம் யார்? ஏன்?
"கல்வி அறிவில்லாத ஒருவர் இற்றைக்கும் இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராக திடீரென எவ்வாறு ஆக முடிந்தது?
அது மட்டுமல்ல அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித்துல்லியமாக தெரிவிக்க முடிந்தது?"
இன்றைய உலகே வியந்து நிற்கும் இக்கேள்விகளுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே இத்திருக்குர்ஆன் பதிலளித்துள்ளது.
இது, (அல்லாஹ்வின்)சிறப்பான வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (திருக்குர்ஆன்-2:2)
அவர்(முஹம்மத்) தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ (இறைவனிலிருந்து தூது) மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன்-53:3,4)
- இறைவனைக்காணும் பயணத்தில் கேள்விகள் பல தூண்டும் இக்குர்ஆனை ஆய்வு செய்வதை ஏன் அறிவியலாகக் காண எமது சிந்தனை மறுக்கிறது?
தெளிவான அறிவைக் கொண்டு தொடர்ந்தும் பயணியுங்கள். ஏனெனில் திருக்குர்ஆன் கூறுகிறது.
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன்-2:99)
நிச்சயமாக அடியார்களில் இறைவனுக்கு அதிகம் பயப்படுபவர்கள் அறிவுடையவர்களே. (35:28)
இங்கு மூளைச்சலவை எனது நோக்கமல்ல; இஸ்லாத்தில் இதற்கான அவசியமில்லை என்பதை விளக்க மேலுள்ள வசனம் போதுமென கருதுகிறேன். காரணம் சிந்திக்குமளவு வளர்ந்திராத சிறுவர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் நிச்சயமான சுவனம் உள்ளதான அறிவித்தல் உள்ளது. தெளிவான சிந்தனயுள்ளவர்களே ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளனர். மனிதப்படைப்பின் நோக்கமும் அவனது அறிவை சோதிப்பதே என்பதை இறைவனின் வசனமான (இக்கூற்றை ஆய்வு செய்வதே இத்தளத்தின் முதன்மை நோக்கம்) திருகுர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகிறது.
(ஆண்,பெண்) கலப்பு இந்திரியத்திலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.(76.2)
எவர் (உண்மை எனக் கண்ட பின்னும்) நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். (குர்ஆன்-41:41)
அடுத்து, இத்தளம் ஆழமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கும் விடயங்கள்.
உங்களது கருத்துகள்.