-09-இத்தளம் ஆழமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கும் விடயங்கள்.



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.

-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.

-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?

-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும்.

-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.

-08-இறைவனைத் தேடும் அறிவியலுக்கான திறப்பு எங்கே?





முஹம்மத்(ஸல்)அவர்கள் இறைவனிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக கூறி உலகிற்கு சமர்ப்பித்த திருக்குர்ஆனின் வரலாற்றையும் அது பேசும் விடயங்களான:-

  • உலக வரலாறு, சட்டங்கள் என்பதுடன்,

  • உலகில் நிருபிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பற்றியும்,

  • ஆறாம் நூற்றாண்டில் எழுதவும், வாசிக்கவும் தெரியாது வாழ்ந்த மனிதரால் எவ்விதத்திலும் யூகிக்கவே முடியாத பிரபஞ்சத்தின் பால் மண்டல வீதிகள் முதல்,

  • தாயின் கருவறையினுள் குழந்தை வளரும் படிமுறைகள் எனவும் இன்னும்,

  • ஆணின் முள்ளந்தண்டிலிருந்து உற்பத்தியாகும் விந்து வரையும் பேசியுள்ள சிக்கலான விஞ்ஞான விடயங்களை பற்றியும் ஆராயும்.

இவ்வளவையும் கூறிய பின் "முடிந்தால் இவ்வசனங்களை பொய்ப்பித்து காட்டுமாறு" கூறும் அல்குர்ஆனின் நெஞ்சுரத்தையும் இன்னும்,

அவர்கள் இந்த குர்ஆனை(கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன்-4:82)

என்று கூறும் அல்குர்ஆனின் சிறப்புகள் பல வற்றையும் ஆராயும். மேலும்,

  • உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களான Oxford மற்றும் Cambridge என்பனவற்றில் திருக்குர்ஆனை ஆராய்வதற்கென்றே அரபு மொழியில் தனித்துறை அமைத்து ஆராய்ச்சி செய்ய காரணம் என்ன?

  • வேறு எந்த புத்தகமாவது இவ்வாறு பல நூற்றாண்டுகளாக முற்றுப்பெறாது தொடர்ந்து ஆய்வுக்குட் பட்டதுண்டா?

  • இதை ஆராய்ந்தவர்கள் என்ன கூறினார்கள்?
இக்கேள்விகளும் அறிவு பூர்வமாக மிகத்தகுந்த ஆதாரங்களுடன் அலசப்படும்.

அதைத்தொடர்ந்து

  • "தாம் இறைவனது தூதர் என்றும் அல்குர்ஆன் உலக மக்களுக்காக அவனால் அருளப்பட்டது" என்றும் வாதம் புரிந்து அதில் வெற்றியும் கண்ட முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றியும்,

  • ஆழமாக அவரை ஆராய்ந்த உலகம் என்ன கண்ணோட்டத்துடன் நோக்குகிறது
என்பதையும் அலசும்.

"அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது இன்னும் பல பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்புகிறதே தவிர பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இல்லை. மேலும் உலக வரலாற்றில் மேற்குலகில் முஹம்மதைப்போல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை"
[Muhammad at Mecca, Oxford 1953, P.52]

  • இவ்வாறு ஏன் இன்றைய உலக பல்கலைகழகங்களின் சக்கரவர்த்தியான Oxford ன் ஆய்வறிக்கை கூறுகிறது?

  • அவரை கண்மூடி பொய்யர் எனக்கூறுவது எவ்வாறு இன்னும் பல கேள்விகளை உருவாக்குகிறது?

  • அவ்வாறு நம்ப வைப்பதில் என்னென்ன சிக்கல்களை உருவாக்குகிறது?

  • உலக மக்களிடம் அவர் எவ்வாறு பரப்புரை செய்யப்படுகிறார்.

  • ஆழமான ஆராய்வாளர்கள் அவரை எவ்வாறு காண்கின்றனர்

  • அப்படி என்ன சிறப்புதான் அச்சாதாரண மனிதரிடம் உள்ளது?
நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.
[மகாத்மா காந்தி-youn India, quoted in the light, lahore, for 16th September 1924.]

  • இவ்வாறான சிறப்பு மிக்க மனிதர் செய்த பிரச்சாரந்தான் என்ன?

  • அவர் உலகிற்கு புதிதாக என்ன கூற வந்தார்?


மிகத் தகுந்த ஆதாரங்களுடன் இவ்வாறான இன்னும் பல கேள்விகளுடன் இவரைப்பற்றி அலசப்படும்.

இவ்விதமே இஸ்லாத்துடன் தொடர்புடைய ஏனைய அனைத்து விடயங்களும் (விமர்சனங்கள் உட்பட) மிக ஆழமாக அறிவார்ந்த முறையில் அணு அணுவாக ஆராயப்படும்.

இங்கு திருக்குர்ஆனையும், முஹம்மத்(ஸல்) அவர்களையும் தனியாக சிறப்பித்துக்காட்ட காரணம். இஸ்லாத்தின் சட்டங்கள் அல்குர்ஆனில் இருந்தும், முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தும் மட்டுமே பெறப்பட வேண்டும் என்பதனாலேயே. உலகமே மதிக்கும் இஸ்லாமிய அறிஞராக இருந்தாலும் கூட அவரது கருத்துகள் இவை இரண்டிலிருந்தும் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படும் போதே பின்பற்றுவது முஸ்லிம்களுக்கு கடமை இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் அறிந்து ஏற்றுக்கொண்ட விடயமே இது என்பதையும் எனது தொடரும் கட்டுரைகள் மூலம் விளங்குவீர்கள்.

கட்டுரைச் சுருக்கம்.



உங்களது கருத்துகள்.