-10-கட்டுரைச் சுருக்கம்.



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.

-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.

-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?

-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும்.

-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.

-08-இறைவனைத் தேடும் அறிவியலுக்கான திறப்பு எங்கே?

-09-இத்தளம் ஆழமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கும் விடயங்கள்.


-10-கட்டுரைச் சுருக்கம்.
  • மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றிய அச்சமே இறைவனை பற்றிய ஆய்விற்கு உட்படுத்துகிறது.

  • அவ் இறைவனை புலனுறுப்புகளால் நிச்சயமாக காண முடியாது.

  • இவ்வாறு புலனுறுப்புகளுக்கு தென்படாது இப்பிரபஞ்சத்தில் மறைந்திருக்க மர்மங்களே இல்லை என்ற வாதம் அறிவீனம். தினந்தோறும் புதுப்புது மர்மங்கள் அவிழ்க்கப்பட்டே வருகின்றன.

  • இதனை ஆதாரமாக கொண்டு நூறு வீத இலக்கையும் விஞ்ஞானம் தொட்டு விட்டதாய் உறுதி தரும் போதே விஞ்ஞானத்திலிருந்து இறைவனை தேடுவது சாத்தியம்.ஆகவே பகுத்தறிவை முழு வீச்சுடன் பிரயோகித்தே இது குறித்த ஆராய்வை மேற்கொள்ள வேண்டும்.

  • மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என நிறுவுவதற்கு ஆதாரம் தேவை என்பது போலவே மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை என்பதற்கும் ஆதாரம் கட்டாயத்தேவையாகும்.(மரணத்திற்கு பின்னுள்ள நிலை குறித்து தேடலே இல்லாது தெரியாது என்று விலகுவது அறிவீனமாகும்.)

  • ஆஸ்திகத்தை நிரூபிக்க இறை வழிகாட்டல் உண்டு (ஒரே இறைவன் உள்ளான் என்பதை முஹம்மத்(ஸல் அவர்கள் சமர்ப்பித்த கோட்பாடுகளை கொண்டு 100% ஒவ்வொருவரது பகுத்தறிவும் சரி என காணும் வரையும், இனி மாற்று கேள்விகளே இல்லை என்ற நிலைக்கு நீங்கள் வரும் வரையும் இறைவனது துணை கொண்டு நிரூபிப்பேன் என உறுதி தருகிறேன்.)

  • நாஸ்திகத்தை நிரூபிக்க ஆதாரம் உண்டா? யார் உள்ளார்? வழி முறைகள் எவ்வாறு? (அவ்வாறே பகுத்தறிவு ஆதாரங்களைக்கொண்டு நாஸ்திகத்தையோ பல கடவுள் கொள்கைகளையோ நிரூபிக்கும் தகைமையுடையவர்களையும் இத்தளத்துடன் துணையாக அணைத்து செல்ல விரும்புகிறேன். இன்னும் எனது வாதத்தை அவை வலுப்படுத்தும் உதவும் என்பதால்.)

  • தேடலே இல்லாது இது பற்றிய அறிவு தம்மிடம் இல்லை எனக்கூறுவது வடித்தெடுத்த அடிப்படைவாதம் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.


முழுக்கட்டுரையும்


உங்களது கருத்துகள்.